Home One Line P2 கொவிட்19: இரஷ்ய தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” எனப் பெயரிடப்பட்டது

கொவிட்19: இரஷ்ய தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” எனப் பெயரிடப்பட்டது

575
0
SHARE
Ad

மாஸ்காவ்: இரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொவிட்19 தொற்றுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்து வலைத்தளத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

“1957- ஆம் ஆண்டில், சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளின் பெயரை இதற்கு வைத்துள்ளோம்

#TamilSchoolmychoice

“இந்த ஒப்பீட்டிற்கு நன்றி. தடுப்பூசி ஸ்பூட்னிக் வி என்ற பெயரைப் பெற்றது” என்று வலைத்தளம் தெரிவித்துள்ளது.

கொவிட்19 தொற்றுக்கு எதிராக தற்போது 160- க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உலகளவில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செவ்வாயன்று, இரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எப்) தலைவர் கிரில் டிமிட்ரிவ் உலகில் “இரஷ்ய தடுப்பு மருந்து மீது ஒருங்கிணைந்த மற்றும் கவனமாக திட்டமிடப்பட்ட தகவல் தாக்குதல்கள்” இருப்பதாகக் கூறினார்.

கொவிட்19 தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து பதிவு செய்த உலகின் முதல் நாடு இரஷ்யா என்று இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை காலை செய்தி வெளியிட்டார்.

இந்த தடுப்பு மருந்து ஜூன் – ஜூலை மாதங்களில் மருத்துவ பரிசோதனைகளை நிறைவேற்றிய இரஷ்ய சுகாதார அமைச்சின், கமலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தில் உருவாக்கப்பட்டதாகும்.