அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதலமைச்சராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோசம் என்று புத்திசாலித்தனமாக பதிலுரைத்தார்.
இப்படி முன்பு ரஜினி சொன்ன பதிலை நினைவுகூர்ந்த வைரமுத்து, இப்படித்தான் எம்.ஜி.ஆரையும் மலையாளி என்றார்கள். பின்னர் ரஜினியை கன்னடர் என்றார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அதையெல்லாம் கடந்தவர்கள். பேச்சு, பழக்கவழக்கத்தின் மூலம் தமிழர்களாக மாறிப்போனவர்கள் என்று பேசினார் வைரமுத்து.