Home உலகம் டி20 இறுதிச் சுற்றில் இலங்கை,மழையும் உதவியது!

டி20 இறுதிச் சுற்றில் இலங்கை,மழையும் உதவியது!

423
0
SHARE
Ad

sl-v-wi-file-imageவங்கதேசம், ஏப்ரல் 4 – இருபது ஓவர் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இலங்கையும் – மேற்கிந்தியத் தீவும் மோதின.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 37 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.