Home நாடு ஜாயிஸ் சரியான அணுகு முறையைக் கையாண்டிருக்க வேண்டும் – அன்வார்

ஜாயிஸ் சரியான அணுகு முறையைக் கையாண்டிருக்க வேண்டும் – அன்வார்

379
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர்ஜூன் 11 – சிலாங்கூரிலும், பினாங்கிலும் அண்மையில் இஸ்லாமிய சமய இலாகா (ஜாயிஸ்) அதிகாரிகள் மேற்கண்ட நடவடிக்கைகள் பல தரப்பினரிடைய கடும் கோபத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், மற்ற இனத்தவரை இழிவுபடுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் எதிர்கட்சித் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்களை சாடினார்.

“இஸ்லாமிய சமய இலாகா அதிகாரிகள் அதிகார ஆணவத்துடன் நடந்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தின் போது இந்து ஆலயத்தினுள் நுழைந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி மணப் பெண்ணை விசாரணைக்கு கொண்டு சென்றது மனிதநேயமற்ற செயல். திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு காரணங்கள் இருந்தாலும் அவர்கள் சரியான அணுகுமுறையை கையாண்டிருக்க வேண்டும்” என்று அன்வார் கூறினார்.

மதம் மாறிய சீனர் ஒருவர் சீன முறைப்படி அடக்கம் செய்யப்படுவதை பினாங்கு மாநில சமய இலாகா அதிகாரிகள் அண்மையில் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த அதிகாரிகளின் ஆணவம் ஒரு மோசமானஅபாயகரமான செயலாக இருக்கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமின்றி முஸ்லிம்களையும் கூட இவர்கள் சிறுமைப்படுத்துவது கண்டிக்கதக்கது என்றும் அன்வார் கூறினார்.