Home அவசியம் படிக்க வேண்டியவை “தூம் 3” இந்திப் படத்தின் மாண்டரின் மொழியாக்கம் 400 அரங்கங்களில் சீனாவில் திரையீடு

“தூம் 3” இந்திப் படத்தின் மாண்டரின் மொழியாக்கம் 400 அரங்கங்களில் சீனாவில் திரையீடு

551
0
SHARE
Ad

dhoom,.பெய்ஜிங், ஜூலை 1 – இதுவரை வந்த இந்திப் படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த இந்திப் படமாகத் திகழும் ‘தூம் 3’ எதிர்வரும், மாண்டரின் மொழியாக்கம் செய்யப்பட்டு, ஜூலை 25ஆம் தேதி முதல் சீனாவின் 400 நகர்களில், சுமார் 2000க்கும் மேற்பட்ட அரங்குகளில் திரையீடு காணவிருக்கின்றது.

அமீர்கான், அபிஷேக் பச்சான், உதய் சோப்ராவோடு இந்திப் படவுலகின் கவர்ச்சிக் கதாநாயகி கத்ரினா கைஃப் நடித்து வெளிவந்த தூம் 3 உலகமெங்கும் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக் குவித்த படமாகும்.

dhoom,சீன நாட்டில் அமீர்கான் தனது படங்களின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர் என்பதால் தூம் 3 திரைப்படமும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 2011இல் மாண்டரின் மொழியாக்கம் செய்யப்பட்டு சீனாவில் வெளியிடப்பட்ட ‘3 இடியட்ஸ்’ படம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமீர்கான் சீன தேசத்தில் பிரபலமான நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதே ‘3 இடியட்ஸ்’ படம்தான் தமிழில் விஜய் நடிக்க ‘நண்பன்’ என்ற பெயரில் வெளியானது. அமீர்கானின் இரட்டை வேட நடிப்பில் உருவான ‘தூம் 3’ சர்க்கஸ் கலைஞனாகப் பணிபுரியும் கதாநாயகன் இரவு வேளைகளில் சாகசங்கள் புரிந்து வங்கிக் கொள்ளைக்காரனாக மாறுவதைக் கூறும் கதையம்சம் கொண்ட படமாகும்.

dhoom-3சீன நாட்டு மக்களைக் கவர்ந்து, சீனாவிலும் இந்தப் படம் வசூல் சாதனை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெறுவதாக கதை பின்னப்பட்டிருக்கின்றது.

533 கோடி ரூபாய் வரை உலகமெங்கும் வசூல் செய்து இதுவரை வெளியான இந்தியப் படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற முத்திரையை தூம் 3 பதித்திருக்கின்றது.