Home இந்தியா உணர்வற்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்!

உணர்வற்ற நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்!

390
0
SHARE
Ad

jaswant_1910823fபுதுடெல்லி,  ஆகஸ்ட் 8 – தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76) டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்வந்த்சிங், உணர்வற்ற (கோமா) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்)  பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சை நடக்கிறது.

அவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி  ஜஸ்வந்த்சிங் மகனிடம் தொலைபேசி  மூலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.