பாகிஸ்தானில் மக்கள் நலன் மீது பிரதமர் ஷெரீப் அக்கறை இன்றி செயல்படுவதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இன்று அங்கு 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பிரதமர் உரையாற்றும் தருணத்தில் பேரணி நடத்தினால் மக்கள் மத்தியில் ஆதரவு பெரும் என கருதிய இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது.
இம்ரான்கானின் போராட்டத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த மதத் தலைவர் தாஹிருல் காத்ரியும் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.