Home நாடு கோத்தா டாமன்சாரா விரைவு இரயில் கட்டுமானப்பணியில் விபத்து! 3 பேர் பலியாகியதாகத் தகவல்!

கோத்தா டாமன்சாரா விரைவு இரயில் கட்டுமானப்பணியில் விபத்து! 3 பேர் பலியாகியதாகத் தகவல்!

459
0
SHARE
Ad

beamபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19 – கோத்தா டாமன்சாரா விரைவு இரயில் (எம்ஆர்டி) கட்டுமானப்பணியில், நேற்று இரவு 300 டன் எடையுள்ள தூண் ஒன்று சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தூணுக்கு அடியில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்று எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice