Home உலகம் ஹிரோஷிமாவில் நிலச்சரிவு – 37 பேர் பலி!

ஹிரோஷிமாவில் நிலச்சரிவு – 37 பேர் பலி!

490
0
SHARE
Ad

Rescue workers are searching for missing peopleடோக்கியோ, ஆகஸ்ட் 22 – ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் ஹிரோஷிமா மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகள் கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அங்கு ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் அந்த பகுதியில் வீடுகளும், கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

#TamilSchoolmychoice

train blazeஇதுபற்றி மீட்புக் குழு கூறியதாவது:- “புதைந்து போனவர்களில் 40-பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதி உள்ள மக்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

புதைந்து போனவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவகின்றது. எனினும் கன மழை தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.