பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி இம்ரான் கான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தொண்டர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன் கடந்த சில நாட்களாக முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் மத்தியில் தினமும் இரவில் இம்ரான்கான் உரையாற்றுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
“புதிய பாகிஸ்தானை உருவாக்குவதுதான் எனது கனவு. இது உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும்தான். புதிய பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு நான் மறுமணம் செய்து கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.
இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான், காசிம் என இரு குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளும் தாயுடன் பிரிட்டனில் வசித்து வருகின்றன.
62 வயதாகும் இம்ரான்கானுக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் குறித்து சமூக இணையதளங்களில் மோசமான கருத்துகள் பரவி வருகின்றன. இந்நிலையில் அவர் மறுமணம் குறித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.