இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள்.
இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து நாடு களத்தில் இறங்கியது. அந்நாட்டின் இடைவிடாத முயற்சியின் காரணமாக அடுத்தடுத்து 48 மணி நேரம், 72 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டன.
இது குறித்து ஹமாஸ் இயக்க செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுகரி கூறும்போது, இரு தரப்பும் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.
பாலஸ்தீன அதிபர் மாமூத் அப்பாஸ் கூறுகையில், “”நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு உதவிய எகிப்து உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து நாட்டைச் சீரமைக்க வேண்டும்” என்றார்.