வாஷங்டன் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குதிக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா தாக்கி முற்றாக அழித்தது என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்கா ஈரான் போர் குறித்து முடிவெடுக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அடுத்த நாளிலேயே ஈரானை ஏமாற்றும் விதமாக அமெரிக்கா இராணுவத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் – இல்லாவிட்டால் அடுத்தகட்டத் தாக்குதல் தொடரும் – அவை இதைவிட மோசமாக இருக்கும் என டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றும்போது எச்சரித்தார்.
எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, ஈரானில் நிலைமை மேலும் மோசமாகலாம் எனக் கருதப்பட்டதற்கு ஏற்ப அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதல் அமைந்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகமும் தற்காலிகமாக மூடப்படும் என மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.