1997-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து மழைப்பொழிவின் அளவு பற்றி அறிவதற்காக விண்ணில் ஏவப்பட்டது தி டிராபிக்கல் ரெயின்பால் மெஷரிங் மிஷன் (டி.ஆர்.எம்.எம்) செயற்கைக்கோள்.
வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இது, விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளது. குறிப்பாக, இதுவரை மழைக்கால சூறாவளிகள், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வறட்சி போன்றவற்றை மிகத்துல்லியமாக பலமுறை கணித்து தந்திருக்கிறது.
வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் தற்போது 17 ஆண்டுகளை விண்வெளியில் கழித்துவிட்டது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோளின் எரிபொருள் காலியாகும் நிலையில் உள்ளது.
முதலில் கீழ் வட்டப் பாதையை நோக்கி வரும் எனவும், பின்னர் பூமியை நெருங்க நெருங்க வெடித்து சிதறி சிறு சிறு துண்டுகளாக விழுந்துவிடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், பூமியில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது நாசா.