136 ஆண்டு பழமையான தோக்கியோவின் தாய்மேய் தொடக்கப் பள்ளிக்கு நேற்று சென்றார் மோடி. அங்கு குழந்தைகள் படிப்பதை பார்வையிட்டார். பின்னர் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார்.
அங்கு நடைபெற்ற இசைப் பாடம் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்தார். குழந்தைகளிடமிருந்து புல்லாங்குழலை வாங்கி வாசித்து காட்டினார். ஜப்பானின் பாடத்திட்டம், தேர்வு முறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டார்.
ஜப்பானின் கல்வித் துறை துணை அமைச்சர் மேகாவா கேகாய் அது குறித்து விரிவாக விளக்கினார். மாணவர்களுக்கு பாடங்களுடன், ஒழுக்கம், நன்னெறி கல்வி ஆகியவையும் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஜப்பானிய மொழியைக் கற்றுத் தர ஆசிரியர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். அதேபோல் இந்திய மொழிகளையும் இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்“ என்றார்.