Home உலகம் உக்ரைன் அதிபருடன் புடின் திடீர் சமரசம்!

உக்ரைன் அதிபருடன் புடின் திடீர் சமரசம்!

459
0
SHARE
Ad

Petro-Poroshenkoகீவ், செப்டம்பர் 4 – பெரும் உயிரிழப்புகளையும், கடும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் உக்ரைன் விவகாரத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் கிர்மியா பகுதியைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என ரஷ்ய ஆதரவு போராளிகள் ஆயுதமேந்தி போராடி வந்தனர். ரஷ்யாவும் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் உக்ரைனின் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரஷ்ய அதிபர் புடினுடன், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோவுடன் இணக்கமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

putinமுன்னதாக, புடினின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “உக்ரைன் அதிபருடன் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு உக்ரைன் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்துக்கள் எழுந்துள்ளன” என்று கூறியுள்ளார்.