பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல்படுகிறது. சில டுரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது.
உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை டுரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு டுரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது.
டுரியன் பழத்தில் கால்சியம், கொழுப்பு, இரும்பு, தாமிரம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், பொட்டாசியம், உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.
வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் டுரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது.
டுரியன் மரத்தின் வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் இரத்த சோகையில் இருந்து குணம் பெறலாம். டுரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
டுரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. டுரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது.
கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் டுரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது.
டுரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு டுரியன் பழத்தோல் மருந்தாக பயன்படுகிறது.