மேற்கத்திய நாடுகளில் நேற்று வர்த்தக ரீதியாக ஆப்பிளின் புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் வெளியிடப்பட்டது. ஆப்பிள் வரலாற்றில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஐபோன் 6 திறன்பேசிகளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
உள்ளூர் பத்திரிக்கைகள் இதற்காக நடத்திய கணக்கெடுப்பில் ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்றதாகக் கூறப்படுகின்றது.
கடந்த சில வருடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் சென்ற திறன்பேசிகளாக ஐபோன் 5 மற்றும் 5 எஸ் இருந்த நிலையில், ஐபோன் 6 தற்போது அந்த வரலாற்றை மாற்றியுள்ளதாகவே ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்டை நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே ஐபோன் 6 நேற்று விற்பனைக்கு வந்தது. ஆப்பிள் கருவிகள் அறிமுகப்படுத்தப்படும் முதல் கட்ட நாடுகளில் எப்போதுமே சிங்கப்பூர் இடம் பெற்று வந்துள்ளது.