Home கலை உலகம் கமலின் ‘தூய்மை இந்தியா’ திட்டம்!

கமலின் ‘தூய்மை இந்தியா’ திட்டம்!

552
0
SHARE
Ad

kamal-hassan-latestசென்னை, நவம்பர் 3 – சுதந்திர தின விழாவில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்திற்கு சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஒன்பது பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கௌரவம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இத்திட்டத்தின் முதற்கட்டப் பணியாக ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியைத் துவங்க உள்ளார்.

கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள இப்பணி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. கமல் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் இத்திட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

#TamilSchoolmychoice

பிற்பகல் 3 மணி அளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பணிகள் குறித்தும், இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.