Home இந்தியா இன்று திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா! இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

இன்று திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப விழா! இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

630
0
SHARE
Ad

maha10திருவண்ணாமலை, டிசம்பர் 5 – அக்னி தலமான திருவண்ணாமலையில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த பெருவிழாவிற்காக, அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு முதலே இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

#TamilSchoolmychoice

tiruvannamalaiபாதுகாப்பு பணிக்காக ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.