Home கலை உலகம் ‘ஐ’ படத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

‘ஐ’ படத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

556
0
SHARE
Ad

Vikram-I-Movie-Stillsசென்னை, ஜனவரி 9 – 2012 ஜூலை 15-ல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட பிரம்மாண்ட படம் ‘ஐ’.  இப்படம் பொங்கல் அன்று ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பிக்சர் ஹவுஸ் மீடியா’ நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளதாகவும், தங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை.

அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘ஐ’ படத்தை தடை செய்ய வேண்டும்” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஐ’ படம் வெளியிடுவதற்கு 3 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும்.

i vikramமேலும் ஜனவரி 30-ஆம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இணையத்தில் செய்திகள் இப்படி பரவ, ஆனால் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் எல்லா பணம் கொடுத்துவிட்டோம். சொன்னபடி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

எனினும் பொங்கல் வரை படங்கள் வெளியாவதில் சரியான முடிவெடுக்க முடியாத நிலையே மக்களிடம் நிலவுகிறது. ஒருவேளை இப்படம் தள்ளிப்போனால் பின்வாங்கிய சில படங்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.