இந்நோய்களை கண்டறிவதற்கே, பல நாட்கள் ஆகும் என்ற நிலையில், இந்த செயலி மூலம் பலர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கும் இந்த புதிய செயலியை, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தி
றன்பேசிகள் மற்றும் கணிப்பொறிகளுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் ஒரு சிறிய ‘டாங்கிளும்’ (dongles), அதனை இயக்குவதற்கு தேவையான செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியின் மேற்புறத்தில் கட்டை விரலை வைத்தவுடன், அது தானாகவே கட்டை விரலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்துக் கொள்ளும்.
எச்ஐவி நோயினைக் கண்டறியும் ‘எலிஸா’ (ELISA) பரிசோதனைக்கு 18,450 டாலர்கள் செலவில் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் நிலையில், இந்த புதிய கருவியை 34 டாலர்கள் செலவில் உருவாக்கிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் கொல்லி நோய்களை கண்டறிவதற்கே மிகுந்த செலவும், அதிகமான காலமும் ஆகி வந்த நிலையில், இந்த புதிய கருவி ஏற்படுத்தி உள்ள மாற்றம், மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்பது நிச்சயம்.