Home நாடு மஇகா: சோதிநாதன் – பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மஇகா: சோதிநாதன் – பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு!

457
0
SHARE
Ad

sothi2கோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகாவில் தினமும் தொடர்ந்து வரும் அறிக்கைப் போர் – பத்திரிக்கையாளர் சந்திப்புகளைத் தொடர்ந்து இன்று டத்தோ எஸ்.சோதிநாதனும், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணனும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கங்களை வழங்கவிருக்கின்றனர்.

சங்கப் பதிவகத்தால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 2013ஆம் ஆண்டு மஇகா தேர்தலில் இருவரும் கட்சியின் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே தேர்தலில் மற்றொரு உதவித் தலைவராக வெற்றி பெற்ற டத்தோ எம்.சரவணன் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து சில விளக்கங்களை வழங்கியிருந்தார்.

#TamilSchoolmychoice

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மஇகா தலைமையகத்தில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது.

இரு அணிகளாகப் பிரிந்து மஇகாவில் நடந்து கொண்டிருக்கும் தலைமைத்துவப் போராட்டத்தில் சோதிநாதன், பாலகிருஷ்ணன் இருவரும் பழனிவேலுவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.