Home உலகம் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து உயிர்கொல்லி பாக்டீரியா வெளியேற்றம்!

அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து உயிர்கொல்லி பாக்டீரியா வெளியேற்றம்!

518
0
SHARE
Ad

si-tulane_rccலூசியானா, மார்ச் 3 – அமெரிக்காவில் உயர் பாதுகாப்பில் இருக்கும் ஆய்வகம் ஒன்றிலிருந்து உயிர்கொல்லி பாக்டீரியா ஒன்று வெளியேறியுள்ளது. இந்த பாக்டீரியா மண் மற்றும் தண்ணீர் மூலமாக மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்கும் அபாயம் கொண்டது எனக் கூறப்படுவதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ‘டுலேன் தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம்’ (Tulane National Primate Research Center)-ல் ‘பர்கோல்டெரியா சூடோமல்லெய்’ (burkholderia pseudomallei) என்ற பாக்டீரியாவிற்கு மருந்து தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தென் கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா இருந்து கொண்டுவரப்பட்ட அந்த பாக்டீரியா, ஆய்வகத்தின் பாதுகாப்பு அமைப்பிலிருந்து வெளியேறி உள்ளதாக ஆய்வக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வகத்தின் அதிகாரிகள் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அந்த பாக்டீரியா கடந்த நவம்பர் மாதம் வெளியேறியுள்ளது. ஆய்வகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்புகள் இருக்கையில் பாக்டீரியா எவ்வாறு வெளியேறியது என விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். இதனால் பொது மக்களுக்கு எந்தவொரு அபாயமும் இருக்காது” என்று கூறியுள்ளனர்.

எனினும், அந்த ஆய்வகத்தில் இருந்த 4 ரீசஸ் குரங்குகள் திடீர் சுகவீனம் அடைந்துள்ளதாகவும், அதேபோல் அந்த ஆய்வகத்தின் மத்திய ஆய்வாளர் ஒருவரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்த பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.