Home இந்தியா மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – இலங்கையில் மோடி வலியுறுத்தல்

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – இலங்கையில் மோடி வலியுறுத்தல்

418
0
SHARE
Ad

Narendra-Modi-01கொழும்பு, மார்ச் 13 – இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் சிறிசேன முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிரதமர் மோடி அதிபர் – சிறிசேன கூட்டாக பத்திரிக்கை யாளர்களுடன் சந்தித்து பேட்டி அளித்தனர்.

முதல் பயணமாக சிறிசேன இந்தியா வந்தது எங்களுக்கு கவுரவம் என்று மோடி தெரிவித்தார். இந்தியா-இலங்கை இடையிலான நட்புறவுக்கு பொருளாதார ரீதியான உறவு முக்கிய காரணியாக உள்ளது என்று அவர் கூறினார்.

டெல்லி-கொழும்பு இடையே நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று மோடி கூறினார். இருநாட்டு உறவின் இதயம் மக்கள்தான் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இரு நாட்டு மீனவர்களும் விரைவில் பிரச்சனைக்கு தீர்வுக்காண மோடி வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

மீனவர்கள் பிரச்சனை குறித்து சிறிசேனவுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார். மேலும் திரிகோணமலையை மேம்படுத்த இந்தியா உதவும் என்றும் மோடி திட்டவட்டமாக கூறினார்.