Home உலகம் கிரிக்கெட் காலிறுதிச் சுற்று: 133 ரன்களில் தென் ஆப்பிரிகாவிடம் சுருண்டது இலங்கை!

கிரிக்கெட் காலிறுதிச் சுற்று: 133 ரன்களில் தென் ஆப்பிரிகாவிடம் சுருண்டது இலங்கை!

477
0
SHARE
Ad

tsotsobe-vs-sangakkaraசிட்னி, மார்ச் 18 – இலங்கை – தென் ஆப்பிரிக்கா மோதும் உலகக்கோப்பை போட்டியின் முதல் காலிறுதிப் போட்டியில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இதில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் தேர்வு செயத இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

hi-res-ae2d83e50af9a1f56eeb74a1b558e49e_crop_northஅதிகபட்சமாக சங்ககரா 45 ரன்களும், திரிமனே 41 ரன்களும், மேத்தியூஸ் 19 ரன்களும் எடுத்தனர்.  இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 3 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து தில்ஷனுடன், சங்கக்கரா களமிறங்கினார்.

#TamilSchoolmychoice

தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆனார். இதையடுத்து இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா.