இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது.
தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கோலி மற்றும் ரகானே ஏமாற்றம் அளித்தனர். கோலி 4 ரன்களிலும், ரகானே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தது.
உலககோப்பையில் ரோகித் சர்மா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 57 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்க உள்ளது.