Home உலகம் தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8-ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை!

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8-ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை!

443
0
SHARE
Ad

ew070126rடோக்கியோ, ஏப்ரல் 20 – ஜப்பான் கடற்பரப்பில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு கடற்பகுதியில் கிழக்கு தைவானை ஒட்டிய பரபரப்பில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவானதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் தைவான் தலைநகரான தாய்பேயில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் கடற்பரப்பில் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன.

ஜப்பானை ஒட்டியுள்ள ஒக்கினாவா தீவு கூட்டங்களை கடலில் மூழகடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமிக்கு வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானொலி அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே நிலநடுகத்தின் அளவு 6.6 மட்டுமே என தெரிவித்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், கடற்கரை பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு மட்டுமே அலைகள் எழுந்துள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என ஆறுதல் தகவல் வெளியிட்டுள்ளது.