‘ஏர் பஸ் ஏ.330 -300’ என்ற அந்த சிங்கப்பூர் விமானம் சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து சென்றது. பயணம் துவங்கி மூன்றரை மணி நேரம் கழிந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு இயந்திரங்களும் மின்சக்தியை இழந்தன.
இந்த இக்கட்டான நேரத்தில் விமானமானது 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நிமிடங்களில் செயல்பாட்டு வழிமுறைகளை சிறப்பாகவும், திறமையாகவும் கையாண்ட விமானி, சில நிமிடங்களில் இரு இயந்திரங்களையும் இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார்.
பின்னர் இரு இயந்திரங்களையும் நிபுணர்கள் தொடர்ந்து சோதனையிட்டனர். இறுதியில் எவ்வித குறைபாடும் நிகழாமல் என்ஜின்கள் இயல்பாக இயங்கியது குறிப்பிடத்தக்கது.