சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.
அவர் மீண்டும் முதல்வராகக் கடந்த 23-ஆம் தேதி பதவியேற்றார். இதையடுத்துப் பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்துத் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து கரூர் மாரியம்மன் கோயிலில் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றில் மொட்டை அடித்துக் கொண்டனர்.
அமைச்சர்கள் அனைவரும் மொட்டை போட்டு வருவதால் இனி மொட்டை அமைச்சர்களை மட்டுமே சில மாதங்களுக்குக் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.