Home Featured தமிழ் நாடு ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ – ஜெயலலிதா அறிவிப்பு!

‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ – ஜெயலலிதா அறிவிப்பு!

556
0
SHARE
Ad

jayalalithaசென்னை – இன்றைய காலகட்டத்தில் நோய்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள அவ்வப்போது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைக்கு குறைந்தது 5,000 முதல் 12,000 வரை செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் செலவிடுவது கடினம்.

எனவே, ஏழை, எளிய மக்களும் முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ளும் வகையில், முன்னோடித் திட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice