சென்னை – இன்று தனது ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் படிக்கட்டில் இறங்கும்போது தவறி விழுந்த நடிகர் கமலஹாசனுக்கு அவரது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும், பின்னர் வழக்கம்போல் அவர் நடப்பதற்கு 4 முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், கமலின் அண்ணன் சந்திரஹாசன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளளார்.
ஒரு வாரத்தில் இல்லம் திரும்பினாலும் அவர் தொடர்ந்து ஓய்விலும், சிகிச்சையிலும் இருந்து வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவரது மனைவி கௌதமியும் மகள்களும் அருகிலிருந்து அவரை கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.