Home Featured உலகம் இத்தாலியில் பனிச்சரிவு: தங்கும்விடுதி புதையுண்டதில் 30 பேர் பலி!

இத்தாலியில் பனிச்சரிவு: தங்கும்விடுதி புதையுண்டதில் 30 பேர் பலி!

697
0
SHARE
Ad

Italyரோம் – இத்தாலியில் பரிண்டோலா என்ற பகுதியில், மலை மேட்டில் அமைந்திருந்த தங்கும்விடுதி ஒன்று, இன்று வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் முற்றிலும் புதையுண்டது.

சுமார் 6 அடி உயரத்திற்கு பனிச்சுவர் தோன்றி தங்குவிடுதியை மூடியதில், அக்கட்டிடத்திற்குள் இருந்த 30 பேர் உயிரிழந்ததாக இத்தாலி உள்நாட்டு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

தற்போது கட்டிடத்திற்குள் புதைந்து கிடக்கும் சடலங்கள் மீட்கும் பணிகளை இத்தாலி மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice