Home Featured தமிழ் நாடு மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்!

மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்!

649
0
SHARE
Ad

OPSசென்னை – (சனிக்கிழமை மதியம் மலேசிய நேரம் 1.00 மணி நிலவரம்) சசிகலா-ஓ.பன்னீர் செல்வம் இடையிலான அரசியல் போராட்டத்தில் மற்றொரு புதிய திருப்பமாக மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர்.

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகிய இருவருமே அவர்களாவர்.

அவர்கள் இருவரும் சென்னையிலுள்ள பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு இன்று சனிக்கிழமை காலை நேரில் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

கோல்டன் பே உல்லாச விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டால் மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வம் பக்கம் வந்து சேருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.