Home Featured நாடு 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழா: அஸ்ட்ரோவில் நேரலையாகக் காணலாம்!

112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழா: அஸ்ட்ரோவில் நேரலையாகக் காணலாம்!

1401
0
SHARE
Ad

Aadhiyogiகோலாலம்பூர் – ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாட கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.

இந்த திருமுகத்தைத் திறந்து வைப்பதுடன், உலகெங்கும் நடைபெற உள்ள மகா யோக வேள்வியை பிரதமர், புனித தீமூட்டி தொடங்கி வைக்கவுள்ளார். பிரம்மாண்டமாக நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் அம்சமாக ஆதியோகி திருவுருவமும் திறக்கப்பவிருக்கிறது.

கோவை ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின் முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட, உலக அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தச் சிலை இன்று மாலை இந்திய நெரப்படி 6 மணியளவில் (மலேசிய நேரப்படி  இரவு 8.30 மணிக்கு) அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா காணவிருக்கின்றது.

அதனை அஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-ல் நேரலையாகக் கண்டுகளிக்கலாம்.