Home இந்தியா அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை

அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்: தினகரன் நம்பிக்கை

838
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – அதிமுக-வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார் என டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு நான் காணாமல் போய்விடுவேன் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. இப்போது அவர்கள் தான் காணாமல் போய்விட்டனர்”

#TamilSchoolmychoice

“கட்சி எங்கள் வசம் தான் உள்ளது. மிக விரைவில் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டி இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம். அதிமுக 3-வது அத்தியாயத்தை சசிகலா எழுதுவார்” என்று தினகரன் தெரிவித்தார்.