Home உலகம் சிட்னியில் தடுப்புச் சுவரில் இரயில் மோதி விபத்து – 15 பேர் காயம்!

சிட்னியில் தடுப்புச் சுவரில் இரயில் மோதி விபத்து – 15 பேர் காயம்!

685
0
SHARE
Ad

Sydney trainசிட்னி – வடகிழக்கு சிட்னியில், இன்று திங்கட்கிழமை இரயில் ஒன்று தடுப்புச் சுவரில் மோதியதில், 15 பேர் காயமுற்றனர்.

ரிச்மண்ட் இரயில் நிறுத்தத்தில் இச்சம்பவம் நடந்ததாக ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இவ்விபத்தில் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, 10 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய இரயில்வே விசாரணை நடத்தி வருகின்றது.