Home One Line P1 தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்!

தஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்!

583
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள தஞ்சோங் பியாய்விற்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல் தேதி குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபுபக்கர் இன்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில், காலியாக உள்ள அத்தொகுதி குறித்து மக்களவைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கைப் பெற்று விட்டதாக அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது.