Home One Line P2 பொன்னியின் செல்வன் : ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இணைகிறார்

பொன்னியின் செல்வன் : ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இணைகிறார்

841
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பாக இரு பாகங்களாக உருவாகவிருக்கும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு தமிழ்த் திரையுலகின் சூடான, பரபரப்பான விஷயம். நாளுக்கு நாள் பொன்னியின் செல்வனில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

நாவல் வடிவத்திலேயே நிறையக் கதாபாத்திரங்களைக் கொண்ட படைப்பு பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கைவண்ணத்தில் திரைவடிவம் காணும்போது, எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு யார் யார் என்ற ஆர்வம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

#TamilSchoolmychoice

உச்ச கட்ட நடிகர்களைத் தவிர்த்து பல இரண்டாம் நிலை கதாநாயக நடிகர்கள் இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏறத்தாழ ஒரு வருடத்திற்கான படப்பிடிப்பு தேதிகளை (கால்ஷீட்) ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மிக நீண்ட நாவலான பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாகிறது. ஏற்கனவே, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, என பல நடிக – நடிகையர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இறுதி நேரத்தில்தான் – படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில்தான் – யார் யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகத் தெரியும்.