Home உலகம் ஐ.நா நீதி விசாரணை: இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வழக்கறிஞர் நியமனம்!

ஐ.நா நீதி விசாரணை: இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வழக்கறிஞர் நியமனம்!

440
0
SHARE
Ad

AITZAZ-AHSANகொழும்பு, மே 19 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசு நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணை நடைபெறுமாயின் ராஜபக்சே தண்டனைக்குள்ளாவது நிச்சயம் என்ற நிலையில், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்த ராஜபக்சே அரசு, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஐட்ஸாஸ் அஹ்சன் என்பவரை நியமித்துள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்பின் விமானத்தை 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் கடத்தியது தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கில் திறம்பட வாதாடியவர் என்று கூறப்படுகின்றது. இவரின் நியமனம் குறித்து இலங்கை அரசு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடன் உதவியை நாடியுள்ளது.

இதனையடுத்து, கடந்த வாரம் ஐட்ஸாஸ் அஹ்சன், ராஜபக்சேவை இலங்கையில் சந்தித்ததாகவும், ஐ.நா. வழக்கு தொடர்பான சில ஆலோசனைகளை கூறிச் சென்றதாகவும் இலங்கை வட்டாரங்கள் கூறுகின்றன.