மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டினைக் கடைப்பிடித்து, திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள வம்சாவளியினர் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
இந்த திருவோணம் பண்டிகை மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவருவதாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், சுகாதார நலத்தையும் வெற்றியையும் தர வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.