மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-
மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒரு வீரர் பலி
அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.