Home நாடு 2013 லகாட் டத்து ஊடுருவல்: 9 தீவிரவாதிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை துவங்கியது!

2013 லகாட் டத்து ஊடுருவல்: 9 தீவிரவாதிகள் மீதான மேல்முறையீட்டு விசாரணை துவங்கியது!

1023
0
SHARE
Ad

lahad datuபுத்ராஜெயா – கடந்த 2013-ம் ஆண்டு நடந்த லகாட் டத்து ஊடுருவல் சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 தீவிரவாதிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மீதான மேல் முறையீட்டு விசாரணைக்காக அவர்கள் அனைவரும் இன்று திங்கட்கிழமை காலை கூட்டரசு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சுமார் 50 காவல்துறையினர் பாதுகாப்போடு அவர்கள் 9 பேரும் கூட்டரசு நீதிமன்றத்திற்கு வந்தனர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 121-ன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இக்குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையோ அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, அவர்கள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து கோத்தா கினபாலு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், பேரரசர் மீது போர் தொடுக்க முயன்ற அவர்கள் 9 பேருக்கு, விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை, டத்தோ முகமது ஜவாவி சாலே தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றியது குறிப்பிடத்தக்கது.