இந்திய சிறு வணிகர்களை குண்டர்கள் எனக் கூறியுள்ள பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் செய்கை குறித்தும் ஜஸ்பால் சிங் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
“இந்திய வணிகர்களை டோனி புவா எவ்வாறு குண்டர்கள் எனக் கூறத் துணிந்தார்?” என்றும் கேள்வி எழுப்பிய ஜஸ்பால், அது மட்டுமில்லாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியர்களை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு தோனி புவா விமர்ச்சித்துள்ளார் என்றும் கடுமையாகச் சாடினார்.
பக்காத்தான் கூட்டணி தங்களுக்கு உதவும் என நம்பிக்கை வைத்து, இந்தியர்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர், குறிப்பாக சிலாங்கூரில், எதிர்க்கட்சிகளுக்கு அபரிதமான ஆதரவை இந்தியர்கள் அளித்த காரணத்தால்தான் பக்காத்தான் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால் அதன் பலனை இந்தியர்கள் இப்போது அனுபவிக்கின்றார்கள் என்றும் ஜஸ்பால் சிங் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் இந்திய வணிகர்களின் பால் பரிவு காட்டி அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முனைந்து வரும் பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவர் (மேயர்) முகமட் அசிசி அவர்களின் முயற்சிகளைத் தான் பாராட்டுவதாகவும் ஜஸ்பால் சிங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இதுவரையில் இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகி, அவர்களுடன் கலந்து பேசி தீர்த்து வைப்பதுதான் தேசிய முன்னணி அரசாங்கத்தின் கலாச்சாரமாக இருந்து வந்துள்ளதே தவிர, எப்போதுமே அவர்கள் இந்திய சிறுவணிகர்களை குண்டர் கும்பல்கள் என்று கூறி ஒதுக்கித் தள்ளியதே இல்லை” என்றும் ஜஸ்பால் சிங் சுட்டிக் காட்டினார்.