குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இதுவரை பயணித்த விமானங்களும், கப்பல்களும் ஒரு தடயம் கூட இல்லாமல் மர்மமாக மாயமாயின. 1492-ல் அமெரிக்காவிற்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்கையில் கொலம்பஸ் கூட பெர்முடா முக்கோணத்தின் தாக்கத்தை பல மயில் தூரத்தில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1909-ல் மீன் பிடி படகு ஒன்று அந்தப் பகுதியில் மாயமானது, 1945-ல் ப்ளோரிடாவில் இருந்து சென்ற அமெரிக்க விமானம் மாயமானது என பல திகில் வரலாற்றைக் கொண்டுள்ளது இந்த பெர்முடா முக்கோணம்.
அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது என இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. ஆனால் தீர்வு தான் கிடைத்த பாடில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியில் அனைத்துவிதமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் மிக முக்கிய வேதங்களுள் ஒன்றான ரிக் வேதத்தில் (23000 வருடங்களுக்கு முன்பு எழுதியது), இந்த பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நவீன அறிவியலால் விளக்க முடியாத மர்மம், ரிக் வேதத்தில் மட்டுமல்லாமல் அதர்வண வேதத்திலும் விளக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.