சென்னை – இன்று முதல் பிரம்மாண்டமான முறையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருக்கும் வேளையில் அவர் போட்டியிடவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத் தொடக்கினார்.
இருப்பினும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று சனிக்கிழமை முதல் 234 தொகுதிகளிலும் அதிமுக அரசின் குறைகளை எடுத்துக் கூறும் வண்ணம் தங்களின் பிரச்சாரங்கள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.