பாதிக்கப்பட்டவர்களில், அதிகமானோர், வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆவர்.
இன்று காலையில் சுடப்பட்டு மாண்ட பலுசிஸ்தான் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவரான வழக்கறிஞர் பிலால் அன்வார் காசி இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அங்கு அதிகமான வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் குழுமியிருந்தனர்.
அப்போது, தற்கொலைத் தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன், 8 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்ட சத்தங்கள் கேட்டதாகவும் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.