சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, கட்சியிடமே இன்று செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்.
“இப்போது கடந்த 8 மாத காலமாக பிரசாரம் இல்லாத காரணத்தாலும், வீணாக அந்தக் காரை வைத்துக் கொண்டு இன்னோவா சம்பத் என்ற அவப் பெயரையும் சுமந்து கொண்டு எதற்காக இருக்க வேண்டும்? என்று தோன்றியதால், இன்று கட்சித் தலைமையிடம் காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.