அப்பெண்ணிடம் ஏமாந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முக்கியப் பிரமுகர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என்றும் பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜானி சே தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியிருக்கின்றனர். ஆனால் சியோலில் குழுவாக இறங்கிய பின்னர் தான் அப்பெண் சொன்னது போல் தங்கும்விடுதிக்கான முன்பதிவு எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்திருக்கிறது என்றும் முகமது ஜானி சே செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
Comments