“ஆமாம்.. நாங்களே அதிர்ச்சியடைத்தோம். மலேசிய வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய பறிமுதல். முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய இரு புத்ராஜெயா இல்லங்களிலும், 4 கோலாலம்பூர் இல்லங்களிலும் கடந்த மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
“அவைகளில் புத்ராஜெயாவில் இருக்கும் ஸ்ரீபெர்டானா அலுவலகமும் ஒன்று. மேலும், பெவிலியன் ரெசிடென்செசில் இருந்த 3 வீடுகளிலும், லங்காக் டூத்தாவில் இருந்த (நஜிப்பின்) தனிவீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அமார் சிங் நேற்று புதன்கிழமை அறிவித்தார்.