இந்தத் தொடக்க நிகழ்ச்சி பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற வேளையில் அதே நேரத்தில் உலகின் இன்னொரு மூலையில் இருக்கும் இலண்டன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் வளாகத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.நற்குணன், மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் ஆகியோர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.